மேலும் ஒருவர் பலி


மேலும் ஒருவர் பலி
x
தினத்தந்தி 6 March 2021 7:13 PM GMT (Updated: 6 March 2021 7:13 PM GMT)

மஞ்சுவிரட்டில் காயம் அடைந்தவர்களில் மேலும் ஒருவர் பலியானார்.

மதுரை, 
கொட்டாம்பட்டி அருகே வெள்ளினிபட்டியில் கடந்த 3-ந்் தேதி ஆண்டிகருப்பு கோவில் திருவிழாவையொட்டி சதுரகிரி மலை அடிவாரத்தில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதற்காக மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று அவிழ்க்கப்பட்டன. அதனை இளைஞர்கள் ஆர்வமுடன் அடக்கி உற்சாகம் அடைந்தனர்.இந்தநிலையில் மஞ்சுவிரட்டு நடைபெற்ற அன்று 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நத்தம் சேர்வீட்டை சேர்ந்த ரகுமான் (28) என்ற வாலிபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தநிலையில் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த காடம்பட்டியை சேர்ந்த காட்டுகருப்பன் மகன் கணேசன் (45) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

Next Story