தீக்காயம் அடைந்த பெண் சாவு


தீக்காயம் அடைந்த பெண் சாவு
x
தினத்தந்தி 6 March 2021 9:20 PM GMT (Updated: 6 March 2021 9:20 PM GMT)

விக்கிரமசிங்கபுரம் அருகே தீக்காயம் அடைந்த பெண் இறந்தார்.

விக்கிரமசிங்கபுரம், மார்ச்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையக்கருங்குளம் ஊரை சேர்ந்த குமார் என்பவருடைய மனைவி சண்முகசுந்தரி (வயது 41). இவர் கடந்த 1-ந் தேதி இரவு சமையல் செய்யும்போது எதிர்பாராதவிதமாக இவரது சேலையில் தீப்பற்றியது. இதில் படுகாயமடைந்த சண்முகசுந்தரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சண்முகசுந்தரியின் கணவர் குமார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு வனஜா, பேபி ஷாலினி ஆகிய 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story