விபத்தில் முதியவர் பலி
தினத்தந்தி 7 March 2021 2:53 AM GMT (Updated: 7 March 2021 2:53 AM GMT)
Text Sizeவிபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெகமம் அருகே உள்ள செங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் நடராஜ்(வயது 72). தொழிலாளி. இவர் நேற்று நெகமம்-பல்லடம் ரோட்டில் உள்ள வாய்க்கால் மேடு அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த கார் திடீரென அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் நடராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire