திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் தடகள போட்டி


திருச்செந்தூர்   டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் தடகள போட்டி
x
தினத்தந்தி 7 March 2021 12:20 PM GMT (Updated: 7 March 2021 12:20 PM GMT)

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் தடகள போட்டி நடந்தது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பி.பி.எஸ்., பி.பி.எட்., மற்றும் எம்.பி.எட். முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தடகள போட்டிகள் நடந்தது. உதவி பேராசிரியர் செல்வகுமார் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

மாணவர்களுக்கு 100 மீட்டர், 400 மீ., 3,000 மீ., 4×200 மீ. தொடர்  ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் போட்டிகளும், மாணவிகளுக்கு 80 மீ., 200 மீ., 1,500 மீ., 4×100 மீ. தொடர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் போட்டிகளும் நடந்தது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் சாம்ராஜ் பரிசுகளை வழங்கினார். பின்னர் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. மாணவர் அலெக்ஸ் சச்சின் காலேப் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் நெல்சன் துரை, சிவா, சாம்சன், நிர்மலா தேவி மற்றும் பி.பி.எட். 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் செய்து இருந்தனர்.

Next Story