வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மார்த்தாண்டம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர்
மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகே செக்குமூடு பகுதியை சேர்ந்த சேகர் மகன் ஹரி பிரசாத் (வயது 27), மர பர்னிச்சர்களுக்கு பாலிஷ் போடும் தொழில் செய்து வந்தார். இவருடைய தாயார் சிறு வயதிலேயே இறந்து விட்டார்.
அதன் பிறகு தந்தை வேறு திருமணம் செய்து தனியாக சென்று விட்டாராம். இதனால் ஹரி பிரசாத் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே தனது பெற்றோரின் அரவணைப்பு இல்லாததால் அவர் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்தநிலையில், நேற்று காலை ஹரி பிரசாத் வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் ஹரி பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story