சேவூர் அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை கணவர் கைது
சேவூர் அருகே வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவரை போலீசார் கைது செய்தனர்.
சேவூர்
சேவூர் அருகே வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தீக்குளிப்பு
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் குட்டைகாட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 32). கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (31). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் வெங்கடாசலபதி தனது மனைவி ஜெயந்தியை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று வரதட்சணை வாங்கி வரச்சொல்லி அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த ஜெயந்தி வீ்ட்டிற்குள் சென்று, அங்கிருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
கணவர் கைது
இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு , கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஜெயந்தி நேற்று இறந்தார். இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வெங்கடாசலபதியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story