திருச்சுழியில் போலீசார் கொடி அணிவகுப்பு


திருச்சுழியில் போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 8 March 2021 7:33 PM GMT (Updated: 8 March 2021 7:33 PM GMT)

திருச்சுழியில் போலீசார் கொடி அணிவகுப்பு

காரியாபட்டி, 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும், 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தியும் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சுழியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் திருச்சுழி  துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. திருச்சுழி குண்டாற்று பாலம் அருகே தொடங்கிய அணிவகுப்பினை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் 200-க்கும் மேற்பட்டோர் திருச்சுழி முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பானது திருச்சுழி குண்டாறு பாலம் அருகே தொடங்கி பஸ்நிலையம், அருப்புக்கோட்டை சாலை வழியாக சென்று திருமேனிநாதர் கோவிலில் நிறைவு பெற்றது.

Next Story