மாடியில் இருந்து தவறி விழுந்து ஓவிய கலைஞர் பலி
மாடியில் இருந்து தவறி விழுந்து ஓவிய கலைஞர் பலி
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ராதா நகரில் வசித்து வந்தவர் கோபி (வயது 38). ஓவியர். இந்தநிலையில் அவர் மது குடித்துவிட்டு மொட்டை மாடியில் சென்று படுத்துக்கொண்டார். மறுநாள் அதிகாலை கீழே வந்தபோது, படிக்கட்டில் கால் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். அவரைப் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று கோபி பரிதாபமாக செத்தார். இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story