4 பவுன் சங்கிலி பறிப்பு


4 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 9 March 2021 8:10 PM GMT (Updated: 9 March 2021 8:10 PM GMT)

காரைக்குடி அருகே பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.

காரைக்குடி,

புதுவயல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சிதம்பரம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராதா (வயது 38). இவர் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக மொபட்டில் கானாடுகாத்தான் சென்றார். கல்லூர் சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ராதாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார் .இதில் காயமடைந்த ராதா கொடுத்த புகாரின்பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story