தேர்தல் விழிப்புணர்வு கோலமிடுதல் போட்டி


தேர்தல் விழிப்புணர்வு கோலமிடுதல் போட்டி
x
தினத்தந்தி 12 March 2021 7:56 PM GMT (Updated: 12 March 2021 8:00 PM GMT)

தேர்தல் விழிப்புணர்வு கோலமிடுதல் போட்டி.

அலங்காநல்லூர்,

பாலமேட்டில் வருவாய்த்துறை சார்பில் வாக்களிக்கும் வைபோகம் என்ற கருத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்டின் ஜெயபால் தலைமை தாங்கினார். தாசில்தார் பழனிகுமார், பேருராட்சிசெயல் அலுவலர் தேவி, வருவாய் ஆய்வாளர் மீனாட்சி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மகளிர் குழுவினர் சார்பில் வண்ண கோலமிட்டு விழிப்புணர்வு செய்தனர். சிறந்த குழுவினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் நாட்டுப்புறக்கலை குழுவினர்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம், நமது உரிமை என்பது உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story