தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது


தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 14 March 2021 2:43 PM GMT (Updated: 14 March 2021 2:43 PM GMT)

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் சேர்மராஜா (வயது 50). இவர் கோவில்பிள்ளை விளை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகராஜா விரைந்து சென்று, கஞ்சா விற்பனை செய்ததாக சேர்மராஜை கைது செய்தார். அவரிமட் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.

Next Story