துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு


துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 14 March 2021 8:33 PM GMT (Updated: 14 March 2021 8:33 PM GMT)

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

சோழவந்தான்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும ்வகையில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துப்பாக்கி ஏந்திய துணை படையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சோழவந்தான் போலீசாருடன் இணைந்து துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பிற்கு சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கிராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனா வரவேற்றார். இந்த அணிவகுப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதபடை போலீசார், துணை ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பு காமராஜர் சிலை அருகே தொடங்கி மாரியம்மன் சன்னதி தெரு, வடக்கு ரதவீதி வழியாக காமராஜர் வைகை பாலம் வந்தடைந்தது.

Next Story