தேனீக்கள் கொட்டி முதியவர் சாவு


தேனீக்கள் கொட்டி முதியவர் சாவு
x
தினத்தந்தி 16 March 2021 6:56 PM GMT (Updated: 16 March 2021 6:56 PM GMT)

தேனீக்கள் கொட்டி முதியவர் சாவு

திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே நெடுமரம் கிராமத்தை சேர்ந்த சோலையன், செல்லத்துரை, சின்னையா, சரோஜா உள்ளிட்ட சிலரை தேனீக்கள் கொட்டி உள்ளது. இதில் காயம் அடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சின்னையா(வயது 70) 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தநிலையில்  அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story