அ.தி.மு.க.வினர் மீது வழக்கு


அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 March 2021 5:45 PM GMT (Updated: 17 March 2021 5:45 PM GMT)

அ.தி.மு.க.வினர் மீது வழக்கு

இளையான்குடி
இளையான்குடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் ஆயிரவைசிய திருமண மகாலில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர்கள் சிலம்பரசன், ராஜபிரதீப் ஆகியோர் கட்சிக்கொடி மற்றும் சின்னங்கள் அடங்கிய வாகணங்களுடன் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி கூட்டமாக நின்றனர். இதனால் இவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், கொரோனா தொற்று கால நடைமுறை, தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் இளையான்குடி வடக்கு குரூப் கிராம நிர்வாக அதிகாரி பாலாஜி இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அ.தி.மு.க. ஒன்றிய தலைவர்கள் சிலம்பரசன், ராஜபிரதீப் மற்றும் பலர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்தனர்.

Next Story