செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 March 2021 11:55 AM GMT (Updated: 18 March 2021 11:55 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நூம்பல் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மணிகண்டன் (வயது 26). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர் கோபித்து கொண்டு தனது தாய் வீடான அச்சரப்பாக்கம் அருகே உள்ள கடம்பூருக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சித்தாமூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின்பேரில் சித்தாமூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story