காங்கிரஸ் வேட்பாளர் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்


காங்கிரஸ் வேட்பாளர் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்
x
தினத்தந்தி 18 March 2021 7:09 PM GMT (Updated: 18 March 2021 7:09 PM GMT)

ராஜினாமா

தேவகோட்டை,

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் கே.ஆர்.ராமசாமி மகன் கருமாணிக்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் அவர் கண்ணங்குடி யூனியனின் 3-வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக கவுன்சிலர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையொட்டி கண்ணங்குடி யூனியன் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் சித்தாணூர் கார்த்திக் என்ற சரவண மெய்யப்பன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.துணைத்தலைவர் சந்திரபோஸ், ஆணையாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கருமாணிக்கம் ராஜினாமா ஏகமனதாக ஏற்று கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story