போச்சம்பள்ளி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது


போச்சம்பள்ளி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2021 7:46 PM GMT (Updated: 18 March 2021 8:14 PM GMT)

போச்சம்பள்ளி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்தூர்,

போச்சம்பள்ளி போலீசார் வலசகவுண்டனூர் சென்னம்மாள் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய வலசகவுண்டனூர் ராமமூர்த்தி (வயது 35), சின்னதுரை (45), சபரிநாதன் (25), பெரியண்ணன் (49) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story