வெண்ணந்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை


வெண்ணந்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 18 March 2021 7:56 PM GMT (Updated: 18 March 2021 7:58 PM GMT)

வெண்ணந்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை.

வெண்ணந்தூர்,

வெண்ணந்தூர் அருகே சப்பையாபுரம் பகுதியை சேர்ந்த கந்தசாமி மனைவி சின்னபொண்ணு (வயது 45). இவருடைய கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் சின்னப்பொண்ணு தன்னுடைய அண்ணன் அன்பழகன் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வைத்திருந்த மண்எண்ணெயை ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து இறந்த பெண்ணின் அண்ணன் அன்பழகன் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
========

Next Story