வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 18 March 2021 8:22 PM GMT (Updated: 18 March 2021 8:22 PM GMT)

வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கரூர்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலமானது திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி ஜவகர் பஜார் கடைவீதிசாலை வழியாக சென்று கரூர் நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.இந்த ஊர்வலத்தில் கரூர் மாவட்ட கல்லூரிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு நேர்மையாக வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர்.

Next Story