தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கட்சி நிர்வாகிகள் உள்பட 3 பேர் மீது வழக்கு


தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கட்சி நிர்வாகிகள் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 March 2021 8:43 PM GMT (Updated: 18 March 2021 8:43 PM GMT)

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கட்சி நிர்வாகிகள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் தேர்தலை முன்னிட்டு கட்சி தலைவர், வேட்பாளர், நிர்வாகிகள் வருகைையயொட்டி சிதம்பரம் சாலை, ஜெயங்கொண்டம் மகிமைபுரம், வேலாயுத நகர் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நகர செயலாளர் மாதவன்தேவா, அ.ம.மு.க. நகர செயலாளர் முரளி, மாவீரன் மஞ்சள் படை மாவட்ட செயலாளர் சின்னப்பன் ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story