விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 19 March 2021 5:41 PM GMT (Updated: 19 March 2021 5:41 PM GMT)

கழுகுமலையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கழுகுமலை, மார்ச்:
கழுகுமலை அருகே உள்ள நாயக்கர்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் சின்ன காளிராஜ் (வயது 20). கழுகுமலையில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் சொந்த ஆட்டோ வாங்கி தர வேண்டுமென தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு கழுகுமலைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இரவு 9 மணி ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவருடைய அண்ணன் பெரிய காளிராஜ், தம்பியைத் தேடி கழுகுமலை- கோவில்பட்டி ரோட்டில் அமைந்துள்ள மாட்டுத்தாவணியில் தேடியுள்ளார். நேற்று காலை மாட்டுத்தாவணியில் கனகராஜ் மாட்டுத் தொழுவம் அருகே சின்ன காளிராஜ் விஷம் குடித்து இறந்து கிடப்பது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் சின்ன காளிராஜின் உடலை கழுகுமலை போலீசார் கைப்பற்றி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சோபா ஜென்ஸி வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story