தொழிலாளி தீக்குளித்து தற்கொலை


தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 19 March 2021 6:08 PM GMT (Updated: 19 March 2021 6:08 PM GMT)

திருச்செந்தூரில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செந்தூர், மார்ச்:
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 50). தொழிலாளியான இவருக்கு மகாராசி என்ற மனைவியும் 3 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். 2 மகளுக்கு திருமணமாகி விட்டது. மற்றொரு மகள் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். மகன் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். மகாலிங்கத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வாராம். அதேபோல் நேற்று முன்தினம் இரவும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து மகாராசி திருப்பூரில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த மகாலிங்கம் மண்எண்ணெய்யோடு மெயின் ரோட்டிற்கு வந்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் சிகிச்சைக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story