மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு


மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 20 March 2021 5:16 PM GMT (Updated: 20 March 2021 5:16 PM GMT)

சாத்தான்குளம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சாத்தான்குளம், மார்ச்:
உடன்குடியைச் சேர்ந்த மாயாண்டி மகன் முருகன் (வயது 28). இவர் சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பன்னம்பாறை அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறியது. இதனால் அங்குள்ள பெரிய கல் மீது மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகன் இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story