பஸ் மோதியதில் தொழிலாளி படுகாயம்


பஸ் மோதியதில் தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 20 March 2021 6:09 PM GMT (Updated: 20 March 2021 6:09 PM GMT)

இளையான்குடி அருகே பஸ் மோதியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

இளையான்குடி,

 பரமக்குடியை சேர்ந்தவர் தெட்சணாமூர்த்தி(வயது 47). கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் இளையான்குடி கண்மாய்க்கரை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் மோதியதில் காயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ேமல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story