டிரைவரை தாக்கிய வாலிபர் கைது


டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 March 2021 9:13 PM GMT (Updated: 20 March 2021 9:13 PM GMT)

டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அனைகுடம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 40). வேன் டிரைவர். இவர் சோழமாதேவியில் இருந்து குறிச்சி செல்லும் சாலையில் புத்து மாரியம்மன் கோவில் அருகே அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த வேனில் கட்சி விளம்பர பாடலை அதிக சத்தத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மணிகண்டன் (22), கட்சி பாட்டு தொடர்பாக கேட்டதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் செந்தில்குமாரையும், வேனையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தா.பழூர் போலீசில் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

Next Story