சிமெண்டு மூடைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது
புழுதிபட்டி அருகே சிமெண்டு மூடைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
எஸ்.புதூர்,
புழுதிபட்டி அருகே சிமெண்டு மூடைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
லாரி கவிழ்ந்தது
மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புழுதிபட்டி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்தது. இதில் தாறுமாறாக ஓடிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாலையில் சிதறிய சிமெண்டு மூடைகள்
இது குறித்து தகவல் அறிந்ததும் புழுதிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சாலையில் சிதறி கிடந்த சிமெண்டு மூடைகள் மாற்று லாரியில் ஏற்றப்பட்டு மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன. விபத்துக்குள்ளான லாரி கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story