கோலம் வரைந்து வாக்காளர் விழிப்புணர்வு


கோலம் வரைந்து வாக்காளர் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 21 March 2021 6:53 PM GMT (Updated: 21 March 2021 6:53 PM GMT)

கோலம் வரைந்து வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகளுக்கு சப்-கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரான்மலையில் உள்ள மங்கைபாகர் தேனம்மை கோவில் அடிவாரத்தில் தெக்கூர் எஸ்.எஸ்.ஏ. சித்தர் ஐயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 80-க்கும் மேற்பட்டோர் வாக்காளர்கள் தங்கள் கடமையை காப்போம் என்ற வாசகத்தோடு கோலங்கள் வரைந்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
 இந்நிகழ்ச்சிக்கு சிவகங்கை சப்-கலெக்டர் கீர்த்தனா தலைமை தாங்கி மாணவிகள் வரைந்த விழிப்புணர்வு கோலங்களை பார்வையிட்டார். பிரான்மலை மருத்துவ அதிகாரி நபிஷா பானு முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஹேமாமாலினி மாணவிகளை பாராட்டினார்.
இதற்கான ஏற்பாடுகளை பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியன், கல்லூரி செயலர் சந்திரசேகர், தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story