நெல்லையில் 18 பேருக்கு கொரோனா
நெல்லையில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
நெல்லை, மார்ச்:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு உவரியை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த போலீஸ் நிலையத்தில் உள்ள போலீஸ்காரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 889 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 15 ஆயிரத்து 590 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.Related Tags :
Next Story