மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 21 March 2021 9:40 PM GMT (Updated: 21 March 2021 9:40 PM GMT)

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்பழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கப்பா(வயது 44). இவர் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வேலைக்கு சென்ற தங்கப்பா, பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து சாப்பிட்டுவிட்டு உறங்கியுள்ளார். நள்ளிரவில் எழுந்து படுக்கையறையில் இருந்த மின் விசிறியை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story