தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 22 March 2021 11:45 AM GMT (Updated: 22 March 2021 11:45 AM GMT)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
2 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நாகம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் அன்னராஜ். இவருடைய மகன் கனகராஜ் (வயது 29). கயத்தாறு தெற்கு கோனார்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலை (52). இவர்கள் 2 பேரும் கயத்தாறு போலீஸ் நிலைய செட்டிக்குறிச்சி வெள்ளாளன் கோட்டை சாலை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து கனகராஜ் மற்றும் சுடலை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கனகராஜ், சுடலை ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

Next Story