செங்கல்பட்டு மாவட்டத்தில் கார்-லாரி மோதி விபத்து; டிரைவர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கார்-லாரி மோதி விபத்து.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 61). கார் டிரைவரான இவர், நேற்று முன்தினம் வண்டலூர் அருகே காரை ஒட்டி செல்லும்போது, முன்னாள் சென்ற லாரியின் பின்புறத்தில் கார் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த டிரைவர் கண்ணனை போலீசார் மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story