பள்ளிபாளையம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிபாளையம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிபாளையம், மார்ச்.26-
பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 32). இவருடைய மனைவி லதா (27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். லதா 2 மகன்களையும் வளர்த்து வருகிறார். இதற்கிடைய கடந்த ஒரு மாதமாக லதா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு 2 மகன்களையும் தனது தங்கை வீட்டிற்கு அனுப்பி விட்டு, வீட்டில் லதா தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story