பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு


பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
x
தினத்தந்தி 30 March 2021 6:24 PM GMT (Updated: 30 March 2021 6:24 PM GMT)

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர்.

இளையான்குடி,

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர்.
முத்துமாரியம்மன் கோவில்
இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 23-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர்.
திருவிழாவையொட்டி தினமும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் முத்துமாரியம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
 பொங்கல் விழா
திருவிழாவை காண சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் கோவிலுக்கு வந்திருந்தனர்.
இதை தொடர்ந்து நேற்று அதிகாலை கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் பானை வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளை பலியிட்டு அங்கேயே விருந்து வைத்து சாப்பிட்டனர்.
 

Next Story