வாலிபருக்கு கத்திக்குத்து


வாலிபருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 31 March 2021 6:23 PM GMT (Updated: 31 March 2021 6:23 PM GMT)

தகராறில் வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார்.

இளையான்குடி, 
இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் முத்துமாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவுக்கு வந்திருந்த காளையார்கோவில் கருமந்தங்குடி கிராமத்தை சேர்ந்த அம்மையப்பன் மகன் அஜித் (வயது19) என்பவருடன் சிலர் தகராறு செய்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதில் படுகாயம் அடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story