மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 2 April 2021 7:29 PM GMT (Updated: 2 April 2021 7:29 PM GMT)

சிவகாசி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், சத்யா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு உள்ள தண்ணீர் தொட்டி அருகே சில்வார்பட்டி வேலூரை சேர்ந்த கோட்டைச்சாமி (வயது 52) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் கோட்டைச்சாமியை கைது செய்து அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்களையும், மது விற்ற ரூ.1,690-யையும் பறிமுதல் செய்தனர்.


Next Story