குன்றி வனப்பகுதி குட்டையில் ஒரேநேரத்தில் வந்து தண்ணீர் குடித்த யானை-காட்டெருமைகள்


குன்றி வனப்பகுதி குட்டையில் ஒரேநேரத்தில் வந்து தண்ணீர் குடித்த யானை-காட்டெருமைகள்
x
தினத்தந்தி 2 April 2021 9:00 PM GMT (Updated: 2 April 2021 9:00 PM GMT)

குன்றி வனப்பகுதி குட்டையில் ஒரேநேரத்தில் வந்து யானை-காட்டெருமைகள் தண்ணீர் குடித்தன.

டி.என்.பாளையம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம், தலமலை, டி.என்.பாளையம், ஜீர்கள்ளி, விளாமுண்டி, கடம்பூர் ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, செந்நாய், கழுதைப்புலி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.  கடம்பூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகளின் தண்ணீர் தேைவயை பூர்த்தி செய்ய  வனப்பகுதியில் வனத்துறை சார்பில் ஆங்காங்கே தொட்டி கட்டப்பட்டு உள்ளது. 
இதேபோல் கடம்பூர் அருகே உள்ள குன்றி வனப்பகுதியிலும் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தரைமட்ட தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் காட்டெருமைகள்  கூட்டமாக குன்றி வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு வந்தன. பின்னர் அவைகள் அந்த தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து கொண்டிருந்தன. அப்போது தண்ணீர் குடிப்பதற்காக அங்கு ஒரு ஆண் யானையும் வந்தது. உடனே காட்டெருமைகளுடன், யானையும் தண்ணீர் குடித்தது. ஒரேநேரத்தில் யானை மற்றும் காட்டெருமைகள் வந்து தண்ணீர் குடித்து சென்ற இந்த காட்சியை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு ஆச்சரியப்பட்டனர். சிலர் தங்களுடைய செல்போனில் அந்த காட்சிகளை படம் பிடித்தனர். 

Next Story