ஓடும் பஸ்சில் தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து 10 பவுன் நகை- பணம் கொள்ளை

ஓடும் பஸ்சில் தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து 10 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார்.
பாடாலூர்:
தனியார் பஸ்சில் பயணம்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை அடுத்துள்ள நம்புக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அருள்மொழி(வயது 55). இவர் தற்போது சென்னையில் உள்ள தி.நகரில் கணவருடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து நம்புக்குறிச்சி கிராமத்திற்கு வருவதற்காக தனியார் பஸ்சில் அருள்மொழி கணவருடன் பயணம் செய்தார்.
நகை- பணம் கொள்ளை
அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த மர்ம நபர், தம்பதியின் மீது மயக்க மருந்து தெளித்ததாகவும், இதில் அவர்கள் மயங்கிய நிலையில், அவர்களின் பையில் இருந்த 10 பவுன் நகையையும், ரூ.5 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் மயக்கம் தெளிந்த தம்பதியினர், நகை மற்றும் பணம் ெகாள்ளையடிக்கப்பட்டிருந்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அருள்மொழி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story