கண்டாச்சிபுரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு


கண்டாச்சிபுரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 3 April 2021 4:18 PM GMT (Updated: 3 April 2021 4:18 PM GMT)

கண்டாச்சிபுரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு

திருக்கோவிலூர்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் உள்ளூர் போலீசாரும், துணை ராணுவத்தினரும் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும், துணை ராணுவத்தினரும் கண்டாச்சிபுரம் கடை வீதி மற்றும் விழுப்புரம்-திருவண்ணாமலை மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். இதில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார், துணை ராணுவத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story