உளுந்தூர்பேட்டை அருகே நர்சிங் மாணவி மர்ம சாவு போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே நர்சிங் மாணவி மர்ம சாவு போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி மகள் சரஸ்வதி(வயது 18). இவர் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். சரஸ்வதி அதே ஊரைச் சேர்ந்த வாலிபரை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அவருக்கு பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சரஸ்வதி அவரது வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரஸ்வதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story