மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதல்
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியது.
நொய்யல்
நொய்யல் அருகே ஒரம்புப்பாளையம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 24). இவர் நேற்று மரவாபாளையத்தில் இருந்து தனது கட்டிட மேஸ்திரி ராதாகிருஷ்ணனை மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்துக் கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ ஒன்று ேமாட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். கார்த்தி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து ராதாகிருஷ்ணன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார், சரக்கு ஆட்டோ டிரைவர் ஒரம்புப்பாளையத்தை சேர்ந்த வடிவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story