பயிற்சி வகுப்பு


பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 3 April 2021 7:10 PM GMT (Updated: 3 April 2021 7:10 PM GMT)

அருப்புக்கோட்டையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 311 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இறுதி கட்ட பயிற்சி வகுப்பு அருப்புக்கோட்டையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கிருமிநாசினி வழங்க வேண்டும். முக கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை பற்றியும், வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசன் தலைமையில், தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் 1,492 அலுவலர்கள் பங்கேற்றனர்.

Next Story