புளியங்குடியில் பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது


புளியங்குடியில்  பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 April 2021 2:58 PM GMT (Updated: 4 April 2021 2:58 PM GMT)

புளியங்குடியில் பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புளியங்குடி:

புளியங்குடி கற்பக வீதி 3-வது தெருவை சேர்ந்தவர் சுதா (வயது 27). இவர் சம்பவத்தன்று அதிகாலை தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், சுதா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சியை வைத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் புளியங்குடி பஸ்நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, புளியங்குடி அடிவெட்டி தெருவைச் சேர்ந்த முருகையா மகன் மகேந்திரன் (22) என்பதும், அவர் சுதாவிடம் சங்கிலி பறித்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து மகேந்திரனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5 பவுன்  தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

Next Story