மணல் கடத்தல் வாலிபர் கைது டிராக்டர் பறிமுதல்


மணல் கடத்தல் வாலிபர் கைது டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 4 April 2021 5:02 PM GMT (Updated: 4 April 2021 5:02 PM GMT)

மணல் கடத்தல் வாலிபர் கைது டிராக்டர் பறிமுதல்

மூங்கில்துறைப்பட்டு

வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் மல்லாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சங்கராபுரம் பகுதியில் இருந்து ரங்கப்பனூர் நோக்கி வந்த டிராக்டரை மடக்கி சோதனை செய்தபோது மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மேலபுரம் பகுதியை சேர்ந்த அங்கப்பன் மகன் அய்யனார்(வயது 34) என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story