தேர்தல் விதி மீறியவர் மீது வழக்கு


தேர்தல் விதி மீறியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 April 2021 6:10 PM GMT (Updated: 4 April 2021 6:10 PM GMT)

இளையான்குடி அருகே தேர்தல் விதி மீறியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள கண்டனி-நெஞ்சத்தூர் கிராமங்களில் தி.மு.க. சார்பில் வாக்கு சேகரிக்கும் கூட்டங்கள் நடைபெற்றது. இதில் கண்டனி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ராஜேந்திரன் (வயது 30) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்து உள்ளார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story