நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு


நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 4 April 2021 7:24 PM GMT (Updated: 4 April 2021 7:24 PM GMT)

நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு

திருப்பூர்
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தெற்கு தொகுதியில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 27 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 
இதற்கு மாநகராட்சி கமிஷனரும், தெற்கு தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமார் தலைமை தாங்கினார். தேர்தல் பார்வையாளர் மசீர் ஆலம் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளித்தார். அப்போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டுவருவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. 

Next Story