ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி அரசு ஊழியர் பலி


ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி அரசு ஊழியர் பலி
x
தினத்தந்தி 5 April 2021 5:35 PM GMT (Updated: 5 April 2021 5:35 PM GMT)

ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

ஆலங்குளம், ஏப்:
வீரகேரளம்புதூர் அருகே இடையர்தவணையை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 53). இவர் ஆலங்குளத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தற்போது தேர்தல் பணியில் இருக்கும் ஹரிஹரன் நேற்று மாலை ஆலங்குளம் அருகே குளத்தில் உள்ள தனது நண்பரான நிறைகுளத்தான் மகன் பாலசுப்பிரமணியன் (45) என்பவரது தோட்டத்திற்கு குளிக்க சென்றுள்ளார். மின்மோட்டார் அறை அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக ஹரிஹரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிஹரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story