தேசிய மருத்துவ கவுன்சில் ஆய்வு
சிவகங்கை மருத்துவ கல்லூரியில் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு நடத்தினார்கள்.
சிவகங்கை,
சிவகங்கை மருத்துவ கல்லூரியில் குழந்தைகள் மருத்துவம் தொடர்பான பட்ட மேற்படிப்பு வகுப்புகள் தொடங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து இங்கு பட்ட மேற்படிப்பு வகுப்புகள் தொடங்க போதுமான வசதிகள் உள்ளதா? என்பது குறித்து தேசிய மருத்துவ கவுன்சில் ஆய்வு நடத்தினார்கள். ஜெய்ப்பூர் மருத்துவ கல்லூரி குழந்தைகள் பிரிவு முதன்மை பேராசிரியர் டாக்டர் சர்மா தலைமையிலான குழுவினர் சிவகங்கை மருத்துவ கல்லூரிக்கு வந்தனர்.
அவர்கள் அங்குள்ள குழந்தைகள் நல பிரிவு மற்றும் வகுப்பு நடத்த உபகரணங்கள், போதுமான வசதிகள் உள்ளதா? என்று பார்வையிட்டனர். அவர்களுடன் மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல், குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் சிவகுமார், உதவி மருத்துவ அலுவலர்கள் ரபி மற்றும் மிதுன் உள்பட பலர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story