கண்மாயில் மூழ்கி தொழிலாளி சாவு


கண்மாயில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 5 April 2021 7:53 PM GMT (Updated: 5 April 2021 7:53 PM GMT)

கண்மாயில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர், 
விருதுநகர்அருகே உள்ள இ.குமாரலிங்காபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 31). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். தினசரி கருப்பசாமி இ.குமாரலிங்காபுரம் கண்மாயை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடுகளை புல் மேய விட்டு மாலை ஆடுகளைக் கண்மாயில் தண்ணீர் குடிக்க விட்ட பின்பு வீடு திரும்புவது வழக்கம்.  இந்நிலையில் நேற்று கருப்பசாமி இ. குமாரலிங்காபுரம் கண்மாயில் இறந்தது கிடப்பதா, அவரது மனைவி கிருஷ்ணவேணிக்கு அப்பகுதியை சேர்ந்த ஒருவர் செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கிருஷ்ணவேணி உறவினர்களுடன் கண்மாய் பகுதிக்கு சென்றார். கருப்பசாமி கண்மாயில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாத நிலையில் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் போலீசார், கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். மேலும் இதுபற்றி கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story