விஷம் குடித்து சிறுமி தற்கொலை


விஷம் குடித்து சிறுமி தற்கொலை
x
தினத்தந்தி 5 April 2021 8:08 PM GMT (Updated: 5 April 2021 8:08 PM GMT)

விஷம் குடித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேலின் மகள் கோடீஸ்வரி (வயது 17). இவரை வீட்டு வேலைகளை சரியாக செய்யும்படி கூறி பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோடீஸ்வரி வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதனை அறிந்த பெற்றோர், அவரை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

Next Story