தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டம்


தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 April 2021 7:27 PM GMT (Updated: 6 April 2021 7:27 PM GMT)

தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்

சிவகங்கை
சிவகங்கையை அடுத்துள்ள சேந்திஉடையநாதபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய செல்லும் போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு வழிவிடாததால் ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்பினர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யக்கோரி நேற்று ஒரு தரப்பை சேர்ந்த சுமார் 150 பேர் வாக்களிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வருவாய்த்துறை சார்பில் அந்த மக்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு அவர்கள் வாக்களிக்க சென்றனர்.

Next Story